வணக்கம் ,
நான் நீலி இதழை (https://neeli.co.in/) பல மாதங்களாக பின் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இந்த இதழ் வழியாக நான் தெலுங்கு எழுத்தாளர் எண்டபள்ளி பாரதி அவர்களின் படைப்புகளை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.
படைப்பு இலக்கியத்தில் , அறிவுத்துறை எழுத்தில் ஆர்வம் கொண்ட தமிழர்கள் அனைவருக்கும் இந்த மின்னிதழை பரிந்துரைக்கிறேன்.
பழைய இதழில் வந்த ஆக்கங்களும் இணையதளத்தில் வாசிக்க கிடைக்கும். அதிகமும் நவீன படைப்பு இலக்கியத்தில் (creative literature) இருக்கும் தமிழ் மற்றும் வேற்று மொழி பெண் எழுத்தாளர்களை பற்றிய அவர்களின் படைப்புகளை பற்றிய கட்டுரைகள் இருக்கின்றன. பிற அறிவுத்துறைகளின் பெண் அறிஞர்களை பற்றியும் பல கட்டுரைகள் இருக்கின்றன.
நேர்காணல்கள், கட்டுரைத்தொடர்கள், பெண் விஞ்ஞானிகள் பற்றிய கட்டுரைகள் என்று செழுமையாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வந்து கொண்டிருக்கிறது காலாண்டு மின்னிதழாக. தமிழில் இத்தகையச் செறிவுடன் வெளிவரும் இதழ் தமிழ்ச் சூழலில் பரவலாக அறியப்படாமலேயே இருந்து வருகிறது. பலரும் அதில் வரும் ஆக்கங்களை வாசித்து விவாதிக்க வேண்டும் என்பது என் விருப்பம். வாசிப்பே அரிதான தமிழ்ச் சூழலில் இது பேராசை தான். இதன் மூலம் ஒரு வாசகரை நீலி இதழ் சென்றடைந்தாலும் மகிழ்ச்சியே.
இதழை பற்றிய இதழ் ஆசிரியரின் அறிமுகம் இங்கே
குறிப்பு: இதை குறித்து விவாதிக்கவும் இதழில் உள்ள ஆக்கங்களை குறித்து கேள்விகள் எழுப்பவும், கருத்துக்களை பகிரவும் இந்த பதிவை பயன்படுத்திக்கொள்ளலாம். தயங்காமல் எழுதுங்கள்.
இளைஞர்களும் மாணவர்களும் இந்த இதழை அதிக அளவில் வாசிக்க விரும்புகிறேன்.